Tuesday, April 24, 2012

Cuddalore Premier League-prize distribution-22 04 12


Cuddalore District Sports Officer says about Arjuna award winners,improvements to be made to the stadium,etc.










Wednesday, April 11, 2012

கால்பந்தாட்ட மைதானம் : சீரமைக்கும் பணி தீவிரம் -dinamalar 12 04 12

கால்பந்தாட்ட மைதானம் : சீரமைக்கும் பணி தீவிரம்
 
    
 
   கடலூர் : கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள கால்பந்தாட்ட மைதானம் பொதுப்பணித்துறை சார்பில் சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்களில் பல்வேறு விளையாட்டுகளுக்கான தனித்தனி மைதானங்கள் உள்ளன. அதில் காலை மற்றும் மாலை நேரங்களில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 30ம் தேதி வீசிய "தானே' புயலில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கம் பெரிதும் சேதமடைந்தது. இதனை அறிந்த தமிழக முதல்வர், விளையாட்டரங்கை சீரமைக்க 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதனைத் தொடர்ந்து விளையாட்டரங்கை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியில் விளையாட்டரங்கில் உள்ள கால்பந்தாட்ட மைதானம் மூன்று லட்சம் ரூபாய் செலவில் செம்மண் அடித்து சீரமைக்கும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Monday, April 9, 2012

Cuddalore-planting of trees.-dinamalar 09 04 12

கடலூர் : கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபாதையையொட்டி மரக்கன்றுகளை நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் தினமும் காலை, மாலை ஏராளமான விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
நடைபாதையையொட்டி ஓய்வு எடுக்கவும், காற்று வாங்கவும், பசுமையாக நிழல் தந்து கொண்டிருந்த வேப்ப மரங்கள், புங்கை மரங்கள், தூங்கு மூஞ்சி மரங்கள் கடந்தாண்டு டிசம்பர் 30ம் தேதி வீசிய "தானே' புயலின் தாக்குதலில் முற்றிலுமாக முறிந்து விழுந்து சேதமடைந்தன. ஒரு சில மரங்கள் மட்டுமே தப்பின. பல மரங்களில் இலைகள் உதிர்ந்து வெறும் எலும்புக் கூடாகவே நிற்கின்றன.
இந்நிலையில், தற்போது கோடை காலம் துவங்கி அனல் காற்று வீசி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் பகல் நேரங்களில் வெளியே தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற நிலையில், அண்ணா விளையாட்டரங்கில் போதுமான மரங்கள் இல்லாததால் வீரர், வீராங்கனைகள் வெயிலின் தாக்கத்திற்கு ஆளாகி சோர்வு அடைகின்றனர். எனவே, அனைத்து தரப்பினரின் நலன் கருதி நடைபாதையையொட்டி மரக்கன்றுகளை நட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Cuddalore-from Dinamalar.-karate belt 09 04 12

கடலூர் : கடலூர் சுன்சுகான் இஷின்ரியூ கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு "பெல்ட்' மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
கடலூர் லட்சுமி சோரடியா மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு சென்சாய் கிருஷ்ணன் வரவேற்றார்.
பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா முன்னிலை வகித்தார். பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டி.எஸ்.பி., வனிதா "பெல்ட்' மற்றும் சான்றிதழ் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சிவானந்தம் வாழ்த்திப் பேசினார்.
விழா ஏற்பாடுகளை உதவி பயிற்சியாளர்கள் விஜயகுலோத்துங்கன், ரமேஷ், சக்திவேல், ரங்கராஜன், ஜானகிராமன், விஜயவல்லபன் ஆகியோர் செய்திருந்தனர். சி.கே.கல்லூரி பேராசிரியர் டானியல் டேவிட் நன்றி கூறினார்.

Friday, April 6, 2012

Yogathan chaval

The art of living cuddalore- Yogathan chaval will take place at Cuddalore Anna stadium from 6 am to 8 am on 07 04 12. Suryanamaskarams will be performed.  Certificates will be given.