Monday, April 9, 2012

Cuddalore-from Dinamalar.-karate belt 09 04 12

கடலூர் : கடலூர் சுன்சுகான் இஷின்ரியூ கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு "பெல்ட்' மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
கடலூர் லட்சுமி சோரடியா மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு சென்சாய் கிருஷ்ணன் வரவேற்றார்.
பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா முன்னிலை வகித்தார். பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டி.எஸ்.பி., வனிதா "பெல்ட்' மற்றும் சான்றிதழ் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சிவானந்தம் வாழ்த்திப் பேசினார்.
விழா ஏற்பாடுகளை உதவி பயிற்சியாளர்கள் விஜயகுலோத்துங்கன், ரமேஷ், சக்திவேல், ரங்கராஜன், ஜானகிராமன், விஜயவல்லபன் ஆகியோர் செய்திருந்தனர். சி.கே.கல்லூரி பேராசிரியர் டானியல் டேவிட் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment