கால்பந்தாட்ட மைதானம் : சீரமைக்கும் பணி தீவிரம்
கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்களில் பல்வேறு விளையாட்டுகளுக்கான தனித்தனி மைதானங்கள் உள்ளன. அதில் காலை மற்றும் மாலை நேரங்களில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 30ம் தேதி வீசிய "தானே' புயலில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கம் பெரிதும் சேதமடைந்தது. இதனை அறிந்த தமிழக முதல்வர், விளையாட்டரங்கை சீரமைக்க 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதனைத் தொடர்ந்து விளையாட்டரங்கை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியில் விளையாட்டரங்கில் உள்ள கால்பந்தாட்ட மைதானம் மூன்று லட்சம் ரூபாய் செலவில் செம்மண் அடித்து சீரமைக்கும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment